ஸ்ரீராம் இலக்கியக் கழகம், கடந்த 1988 ஆம்
ஆண்டு
முதல் ஒவ்வொரு ஆண்டும் 'திருக்குறள்
விழாவினை
மிகச் சிறப்பாக நடத்தி வருகிறது.
இவ்விழாவின் ஒரு பகுதியாக, மாணவர்களிடையே
திருக்குறளின் கருத்துக்களைப் பரப்பவும்,
பேச்சாற்றலைப்
பெருக்கவும், வரையும் திறனை
வெளிப்படுத்தவும், எழுத்தார்வத்தைத் தூண்டவும்
மாநில அளவில் பள்ளி
மற்றும்
கல்லூரி
மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி
மற்றும் கட்டுரைப் போட்டிகளை
ஸ்ரீராம் குழுமம்
சிறப்பாக நடத்தி வருகிறது.
போட்டிகள் நடத்தப்படும் முறை:
இடைநிலை / மேல்நிலை / கல்லூரி உள்ளிட்ட ஒவ்வொரு பிரிவிலும்
உள்ள மாணவ, மாணவியருக்கு இடையே போட்டிகள் நடத்தப்படும்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அனுப்பவேண்டிய
கடைசி நாள்:
| சேலம், வேலூர் | 11 ஜூலை 2026 |
| திருவாரூர், புதுச்சேரி | 18 ஜூலை 2026 |
| ஈரோடு, கோயம்புத்தூர் | 25 ஜூலை 2026 |
| தஞ்சாவூர், திருச்சி | 01 ஆகஸ்ட் 2026 |
| மதுரை, திருநெல்வேலி | 08 ஆகஸ்ட் 2026 |
| சென்னை, தாம்பரம் | 16 ஆகஸ்ட் 2026 |